தன்னம்பிக்கையுடன் முயற்சி இருந்தால் வெற்றி உங்களுக்கே!
எதையும் நம்மால் செய்ய முடியுமா என்ற தயக்கம் இன்றி எதற்கும் பயம் இல்லாமல் உங்கள் மீது நம்பிக்கை வைத்து தைரியமாக எதுவும் செய்தால் வெற்றி நிச்சயம் உங்களுக்கனானது.
பயத்தை விடுங்கள்!
எந்த செயலையும் செய்வதற்கு முன் அதில் உள்ள நன்மை தீமைகளை ஆராய்ந்து திட்டமிட்டு செய்வதன் மூலம் பயம் இன்றி நம்மால் செய்ய முடியும். வெற்றி, தோல்வியோ எதுவாயினும் அதை கண்டு அஞ்சாமல் துணிந்து காரியத்தை செய்வதன் மூலம் வெற்றி உங்கள் வசம் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
முயற்சி திருவினையாக்கும்…
முயற்சி ஒன்று இல்லாமல் யாராலும் எதையும் சாதிக்க முடியாது. எந்த ஒரு செயலை செய்வதற்கும் பயந்து கொண்டே இருந்தால் வாழ்க்கையில் வெற்றி பெற முடியாது. உங்களால் இந்த செயலை செய்ய முடியுமா? என்று கேட்டால் தன்னம்பிக்கையோடு நிச்சயமாக என்னால் முடியும் என்று தயக்கம் இன்றி சொல்லுங்கள். நாம் நினைத்தால் அகிலத்தை வெல்லலாம்.
பயம், தயக்கம் இரண்டும் இருந்தால் நிச்சயமாக நம்மால் வாழ்வில் முன்னோக்கி செல்லமுடியாது. எனவே, இவற்றை தூக்கி எரிந்து விட்டு தன்னம்பிக்கையுடன் இன்றே உங்கள் வெற்றி பாதையை நோக்கி வெற்றி நடை போடுங்கள். வெற்றி எப்பொழுதும் உங்களுடையதே.